தஞ்சாவூர்: தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் ரெட்கிராஸ் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இரத்ததான முகாமிற்கு இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரு. சுரேஷ், திரு. வீரமணி, புகைப்படக் கலைஞர் திரு. பரணி, ரெட்கிராஸ் வாழ்நாள் உறுப்பினர் திரு. உதயகுமார் மற்றும் மாணவர்கள் பலர் இரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் மாவட்ட துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், செயலாளர் திரு. கலைச்செல்வன், யூத் ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், பயோகேர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.