சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் ஜூன் 2023-ல் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் 26, 2024 அன்று உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது. அவரும் ஒரு நாளில் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘தற்போது அமைச்சர் இல்லை என்று ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒரு நாளில் மீண்டும் அமைச்சராகி விட்டார். இதன் காரணமாக, தனக்கு எதிராக சாட்சியமளிக்க யாரும் முன்வராத காரணத்தினால், தனக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.’ இந்த வழக்கை மார்ச் 24-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை எங்களுக்குத் தெரிவிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.

அவர் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, “இந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்” என்று கோரினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஏப்ரல் 8-ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மீண்டும் அமைச்சராக பதவியேற்றதில், சட்ட முரண்பாடு இல்லை.
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ஜாமீன் உத்தரவில் நான் அமைச்சர் பதவி வகிக்க எந்த சட்ட தடையும் இல்லை. அதில் கூறப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை நான் இதுவரை மீறவில்லை. மனுதாரர் என் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் எதுவும் கூறவில்லை. எனவே, இந்த மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இந்த வழக்கு மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கால அவகாசம் இல்லாததால் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.