தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் அதிகம். இந்த கல்வியாண்டில், மழலையர் வகுப்பில் 32,807 மாணவர்கள், தமிழ் வழி மூலம் முதல் வகுப்பில் 2,11,563 மாணவர்கள், ஆங்கில வழி மூலம் 63,896 மாணவர்கள், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- பல்வேறு வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் நடவடிக்கைகள் காரணமாக அரசுப் பள்ளிகள் மீது பெற்றோரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் உயர்கல்வியில் இடஒதுக்கீடு காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் 58 கல்வி மாவட்டங்கள் உள்ளன. முதலாம் வகுப்பில் 8,571 மாணவர்களுடன் தென்காசி கல்வி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நீலகிரி கல்வி மாவட்டத்தில் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கை 1,022 மாணவர்களுடன் உள்ளது. முதலாம் வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்த முதல் 10 கல்வி மாவட்டங்கள்:
தென்காசி- 8,471, திண்டுக்கல்- 8,000, திருச்சி- 7,711, கள்ளக்குறிச்சி- 7,554, திருவண்ணாமலை- 7,386, சிவகாசி- 6,809, திருப்பூர்- 6,777, திருவாரூர்- 6,592, கோவை- 6,423, திருப்பத்தூர்- 6,418. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பத்து கல்வி மாவட்டங்கள்: நீலகிரி- 1,022, தேனி- 2,207, ஒட்டன்சத்திரம்- 2,480, தாராபுரம்- 2,594, பொள்ளாச்சி- 2,597, அரியலூர்- 2,625, பெரம்பலூர்- 2,648 3,077, சிவகங்கை- 3,223. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.