டெல்லி: மாஞ்சோலை, அகஸ்தியர் மலையில் ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

தேயிலை தோட்டத்தை கையகப்படுத்தி மீண்டும் காடாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேறு எந்த நடவடிக்கையும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வாதிட்டது.
மாஞ்சோலை, அகஸ்தியர் மலையில் வனப் பயிர்ச்சாகுபடி, தோட்டங்கள் தவிர வேறு பணிகள் நடைபெறுகிறதா என கணக்கெடுப்பு நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.