சென்னை: சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் அதிக வாடகைக்கு தனியார் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, சமூக நலத்துறையின் கீழ் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து மேலும் 6 இடங்களில் பெண்களுக்கான விடுதிகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, சென்னை சேப்பாக்கம், சென்னை தரமணி, ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் போலப்பள்ளி, கோவை மருத்துவக் கல்லூரியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தங்கும் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகளை 70 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் முடிந்த பின், தங்கும் விடுதி கட்டும் பணி துவங்கும்.