சென்னை: கடந்த 2024-2025 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 2021-2022 நிதியாண்டில் ரூ. 36,050 கோடி பெறப்பட்டது மற்றும் 2022-2023 நிதியாண்டில் ரூ. 44,121 கோடி பெறப்பட்டது. 2023-2024 நிதியாண்டில் பெற்ற வருவாய் ரூ. 45,855 கோடியும், 2024-2025 நிதியாண்டில் ரூ. 48,344 கோடியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 2024-2025 நிதியாண்டில் கிடைத்த வருவாய் 2023-2024 நிதியாண்டை விட ரூ. 2489 கோடி அதிகம். அரசுக்கு ரூ. 62.88 கோடி சிறப்புக் கட்டணமாகவும், 2024-25-ம் ஆண்டில் வெளிநாட்டு மதுபானம் இறக்குமதியிலிருந்து சேவைக் கட்டணமாக ரூ. 32.52 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறை மூலம் பீர் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2024-2025-ம் ஆண்டில், மார்ச் 31 வரை 21,80,465 பீர் கேஸ்கள் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 777.07 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் ஏற்றுமதி செய்ய ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.