சென்னை: விசைப் படகுகளுக்கு இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும். நாட்டுப்படகு மற்றும் சிறுபடகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மீன்பிடி தடைக்காலம் என்று பெயர். ஆனால், இந்த மீன்பிடித் தடைக் காலத்தில் விசைப் படகுகளைத் தவிர மற்ற சிறிய நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல எந்தத் தடையும் இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும். நாட்டுப்படகுகள் மற்றும் சிறிய படகுகளில் வரும் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடியில் ஈடுபடுவார்கள். மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.