சென்னை: பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.