பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.
ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும். செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும்.

திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியிலிருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28 ஆகிய தேதிகளில் மானாமதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் சிறிது நேரம் மானாமதுரையில் நின்று செல்லும்.
ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28 ஆகிய தேதிகளில் புறப்படும். மாலை 4.55 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.