வேதாரண்யம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், தங்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வலை, ஜி.பி.எஸ்., செயின் மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.