சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழிபடும் உரிமையை எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். சாதி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்துவதன் மூலம் வழிபாட்டுத் தலங்களில் கடவுளை வழிபடும் உரிமையை உறுதி செய்யுமாறு தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கும் தமிழகம் வழிபாட்டு உரிமையைப் பெறுவதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.