தமிழகத்தில் வரும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் நிலவும் கிழக்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக (8.01.2023, 9.01.2023), தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படுகிறது. (10.01.2023 முதல் 12.01.2023 வரை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அவ்வாறு கூறுகிறது.