புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை … சிங்கப்பூரில் இந்தியர் கைது
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் சென்டோசா தீவில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. ஹோட்டல் 2023 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 31 அன்று இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது விடுதியில் இருந்த சுப்ரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்ற இந்தியர் அங்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரத்தில் முரளிமனோகரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர் முரளி மனோகர் ஜோஷியை வரும் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் முரளிக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்