அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி… முதல் முறையாக பட்டம் வென்ற பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனை
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலெங்காவும், செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவும் இந்த பரபரப்பான ஆட்டத்தில் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சபலென்கா அடிலெய்டு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.