
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு ரசிக்கின்றனர்.
அங்குள்ள புல்வெளிகளில் ஓடி விளையாடி மகிழ்கின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் காலங்களில் ஏராளமான மலர் செடிகள் நடப்பட்டு, அதில் பூக்கும் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இவ்விரு சீசன்களுக்கு இடையே பூக்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம். இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் கண்ணாடி மாளிகை எப்போதும் பல்வேறு வகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உங்க ஊர் முழுவதும் சென்னை மலர் கண்காட்சிக்காக பூந்தொட்டிகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகளில் இருந்து இந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு தற்போது விதைப்புக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால், தோட்டத்தில் பூக்கள் இல்லாத நிலையில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.
இந்த கண்ணாடி மாளிகையில் பூந்தொட்டிகளால் செய்யப்பட்ட மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. அதன் அருகே சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். தற்போது, பால்சம், சைக்ளோபின், பேன்சி, பெட்டோனியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூந்தொட்டிகளை கொண்டு இந்த மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.