இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் ஒரே மாதிரியான வரி அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டது. மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16.4 சதவீதம் அதிகரித்து ரூ.2.01 லட்சம் கோடியை கடந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடியுடன் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் 13.7 சதவீதம் உயர்வு காணப்பட்டது. இறக்குமதிகள் மூலம் வந்த வருவாயும் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியாக இருந்தது. மத்திய ஜிஎஸ்டி ரூ.35,434 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,902 கோடியும் வசூலிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.09 லட்சம் கோடியும், செஸ் வரி ரூ.12,879 கோடியும் இருந்தன.
மே மாத ரீஃபண்ட் தொகை 4 சதவீதம் குறைந்து ரூ.27,210 கோடியாக இருந்தது. நிகர ஜிஎஸ்டி வசூல் சுமார் ரூ.1.74 லட்சம் கோடி என்ற அளவில் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 20.4 சதவீதம் அதிகம்.
மாநிலங்களுக்கிடையே வசூலில் வித்தியாசம் இருந்தது. தமிழ்நாடு 25 சதவீதம், கேரளா 24%, பீகார் 23%, கர்நாடகா 20%, டெல்லி 58% வளர்ச்சியைக் கண்டன. ஆனால் குஜராத் 4%, தெலுங்கானா 6%, ஆந்திரா -2% என குறைவாக இருந்தன.
இந்த தரவுகள் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. வருங்காலத்தில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.