இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்தும், 22வது தொழில்நுட்ப மாநாடு, ‘சிஐஐ, ‘கனெக்ட்’, நேற்று துவங்கியது. இரண்டு நாள் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டை துவக்கி வைத்து அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: சென்னையில் ‘உமாஜின்’ மாநாடு அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி தொழில்நுட்ப பேச்சாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.

‘பெமா’, அமெரிக்க வல்லுனர்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், ‘ஸ்பேஸ் டெக்’ மற்றும் பல நிறுவனங்களின் வல்லுனர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தொழில் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மாநாட்டில், ‘சி.ஐ.ஐ., கனெக்ட்’ மாநாட்டு தலைவர் மகாலிங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், தென் மண்டல தலைவர் நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.