இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து
லண்டன்: இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் பின்னர் சரியான சிக்னல் இல்லாததால் பல விமானங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.
இதன் காரணமாக இங்கிலாந்தில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அதை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் பல மணி நேரம் போராடினர்.
இருப்பினும், இந்த தொழில்நுட்பக் கோளாறால், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானங்களின் அட்டவணை நாள் முழுவதும் மாற்றப்பட்டது. இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.