கருணாநிதி பிறந்தநாள் பேரணி ரத்து – ரயில் விபத்து எதிரொலி
ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசும், தி.மு.க. கட்சி சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
தேசத்தையே சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து காரணமாக சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் கருணாநிதி நினைவிடம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.