May 27, 2024

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அமலுக்கு வந்த பிறகும் ஒருவர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்..!

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அரசாணையில் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரத்தில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சுமார் 90 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் என்ற 32 வயது வாலிபர் சூதாட்டத்தில் நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தங்கியிருந்த விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உடனடியாக காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அமலுக்கு வந்த பிறகும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!