இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் பின்னர், ஹரிணி அமரசூரிய(54) புதிய பிரதமராக பதவியேற்றார். முன்னர், செப்டம்பர் மாதத்தில் அவர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஹரிணி, கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சராக பதவியேற்றார். புதிய அமைச்சர்கள் பட்டியலில், விஜித ஹேரத் (வெளியுறவு), சந்தன அபேரத்ன (உள்ளாட்சி), ஹர்சன நானயக்கார (நீதி), மற்றும் லால் காந்த (வேளாண்) ஆகியோர் உள்ளனர்.
இலங்கையின் புதிய அமைச்சரவை 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இதில் 2 தமிழர் பெண்கள் சரோஜா சாவித்திரி போல்ராஜ்(மகளிர் நலம்) மற்றும் ராமலிங்கம் சந்திரசேகர் (கடல் வளம்) உள்ளனர்.
பிரதமர் ஹரிணி, கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படை கல்வி முடித்த பிறகு, டெல்லி இந்து கல்லூரியில் சமூக வியலில் பட்டம் பெற்றார். மேலும், அவர் ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இலங்கை திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய பின், அரசியல் ஆர்வத்தால் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் சேர்ந்தார்.