நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு விருது விழாவில் தனது காதல் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்துள்ளார். தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடன் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அதைப் பற்றி திருமணத்திற்கு முன்பே அறிவித்ததாகவும் கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் கோவாவில் அவர்கள் திருமணம் நடந்தது.

விருது விழாவில் பேசிய கீர்த்தியிடம் காதலை ரகசியமாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்கு, “ரொம்ப கஷ்டம்” என்றார். கணவருக்கு பிடித்த படங்களை பற்றி பேசும் போது, நடிகையர் திலகம், சாணிக் காயிதம், ரகு தாத்தா மற்றும் தசரா பிடிக்கும் என்றார்.சாணிக் காயிதத்தில் அவர் நடித்த வேடம் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்ததால், அந்த படம் பார்த்த பிறகு அவரது கணவர் ஆண்டனி 10 நாட்கள் அருகில் வரவில்லை என்றும் கூறினார்.
இந்த தகவல் அரங்கில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பாலிவுட்டில் “பேபி ஜான” படத்துக்குப் பிறகு மேலும் ஒரு படத்தில் கீர்த்தி நடிக்க உள்ளார். மேலும், சூர்யா நடிக்கும் “79 சிசி” படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தில் கீர்த்தியின் ஈடுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருது விழாவில் கீர்த்தியின் சுயபகிர்வு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் தமிழிலும், ஹிந்தியிலும் வெற்றி பாதையை தொடர்கிறார்.