ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?
தேவையானவை : அரிசி – 2 கப், வறுத்த பருப்பு – 1 கப், எலும்பில்லாத மட்டன் – அரை கிலோ, வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது), கேரட் – 4 (பொடியாக நறுக்கியது), உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது), பட்டாணி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, மசாலா தூள், மிளகாய், தக்காளி – 4, (நறுக்கியது) பட்டை, ஏலக்காய் – சிறிது இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஆட்டிறைச்சி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்றாக வெந்ததும் குக்கரை திறந்து அரிசி மற்றும் பருப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பெருங்காயம், வெங்காயம், மசாலாத்தூள் சேர்த்து அரைத்த கலவையில் சேர்க்கவும். பிறகு அடுப்பில் வைத்து கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். சுவையான மட்டன் கஞ்சி தயார்.