சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி:- அ.தி.மு.க., – பா.ஜ.க., கூட்டணி உறுதியானதை, ‘டிவி’யில் நானும் பார்த்தேன். அதை பற்றி தெரிந்து கொண்டேன். இது இரு கட்சிகளும் இணைந்து எடுத்த முடிவு. அதுபற்றி நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் ஏப்ரல் 30-ம் தேதி செயற்குழு-பொதுக்குழுவை நடத்த உள்ளோம்.
அதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனால்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர். தேமுதிகவின் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சிப் பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். செயற்குழு-பொதுக்குழு கூடியவுடன், பதவிகள் அறிவிக்கப்படும். கட்சியை பலப்படுத்தும் பணியை 6 மாதங்களுக்கு மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.

அதனால் இந்த முறை நிறைய யோசித்து நிதானமாக முடிவெடுப்போம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் அக்கட்சியின் முடிவு. அதில் எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை. புதிய தலைவருக்கு திமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.