லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் “கூலி” திரைப்படத்தின் பிஸியான பிந்தைய பணிகளில் முழு நேரத்தையும் செலவழிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீட்டை குறிவைத்துப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

லோகேஷ் தற்போது சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுத்துள்ளார், ஆனால் படம் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் வருவதாக கூறியுள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய், ரஜினி குறித்து பேசினார். “மாஸ்டர்” படத்தின் போது தான் அடுத்ததாக என்ன படம் செய்வது என்ற யோசனையில்லாத தருணத்தில் விஜய் அவரிடம், “தலைவருக்கொரு படம் பண்ணு, சூப்பரா இருக்கும்” என உற்சாகமாகக் கூறியதாக லோகேஷ் தெரிவித்தார்.
விஜயின் இந்த வார்த்தைகளே கூலி படத்துக்கான தூண்டுகோலாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.மேலும், ரஜினியை வைத்து படம் இயக்கப்போகிறேன் என்ற செய்தி வெளியான தருணத்தில் முதலில் அழைத்து வாழ்த்தியவரும் விஜய்தான் எனவும் அவர் கூறினார். இதுவே ரஜினி-விஜய் நட்பின் உண்மையை வெளிப்படுத்தும் அழகான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இருவரும் ரசிகர்கள் இடையே மோதல் இருந்தாலும், நடிகர்களிடையே மதிப்பும் உறவும்தான் இருப்பது இவற்றில் தெளிவாகிறது.லோகேஷ் தற்போது “கூலி” படத்தை முடிக்க தொடர்ந்து உழைத்து வருகிறார். இதற்கிடையே “கைதி 2” பற்றிய எதிர்பார்ப்பும் எழுகிறது. ஆனால் விஜய் சொன்னதை மனதில் வைத்து “மாஸ்டர் 2” உருவாகும் வாய்ப்பும் இருக்கலாம் என ரசிகர்கள் எண்ணி காத்திருக்கின்றனர். லோகேஷ் வகுக்கும் இந்தத் திட்டங்கள் தமிழ்த் திரையுலகத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.