வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது குறித்து எலான் மஸ்க் பல்வேறு சமயங்களில் பேசியுள்ளார். இந்நிலையில், ஸ்டார்ஷிப் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ மனித உருவ ரோபோவை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “அடுத்த ஆண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஸ்டார்ஷிப் புறப்பட உள்ளது.
இதில் ஆப்டிமஸ் ரோபோவும் பயணிக்கிறது. இந்த தரையிறங்கும் முயற்சி வெற்றியடைந்தால் 2029-க்குள் மனிதர்கள் அங்கு தரையிறங்க வாய்ப்புள்ளது.” எலோன் மஸ்க் தனது X தள பதிவில் கூறியுள்ளார். ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய விண்கலம் என்று அறியப்படுகிறது. இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்.

அமெரிக்காவின் நாசாவும் அதே விண்கலத்தைப் பயன்படுத்தி மீண்டும் நிலவில் மனிதர்களை தரையிறக்க முயற்சிக்கிறது. ஸ்டார்ஷிப் சமீபத்தில் சோதனை ஓட்டத்தின் போது வெடித்தது. அதுவே இந்த முயற்சியில் சற்று பின்னடைவு. ‘மனிதன் நிலவில் கடைசியாக இறங்கி அரை நூற்றாண்டு ஆகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மனித நாகரிகத்தின் மிக உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது.
மனிதர்களுக்கு நிலவில் ஒரு தளம் இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். நட்சத்திரங்களில் மனிதர்களும் இருக்க வேண்டும்’ என்று 2023-ல் மஸ்க் கூறினார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்க மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட்டது.