ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்து ரொனால்டோவை முந்தினார் மெஸ்ஸி
பாரிஸ்: உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் லியோனல் மெஸ்ஸியும் ஒருவர். அர்ஜென்டினா கேப்டன் தற்போது பிரான்சில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார்.
பிரான்ஸ் கால்பந்து ‘லீக்’ போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி-நைஸ் அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி 2-0 என வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.
இதன் மூலம் ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். அவர் ரொனால்டோவை முந்தி புதிய சாதனையை எட்டினார்.
மெஸ்ஸி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோவை விட மெஸ்ஸி குறைந்த போட்டிகளில் அதிக கோல்களை அடித்துள்ளார்.