வார்ஸா: உக்ரைன் போரின் நடுவே, ரஷ்ய டிரோன்கள் போலந்து எல்லைக்குள் ஊடுருவியதாகவும், அவற்றை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, அன்றாடம் ஆளில்லா டிரோன்களை பயன்படுத்தி குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இவ்வாறு உக்ரைன் இலக்குகளைத் தாக்கிய சில டிரோன்கள், நேட்டோ உறுப்பினரான போலந்தின் வான்வெளிக்குள் நுழைந்தன. உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட போலந்து ராணுவம், அவற்றை துல்லியமாக சுட்டு வீழ்த்தியது.

நேட்டோ கூட்டமைப்பின் அடிப்படையில், ஒரு உறுப்பினருக்கு எதிரான தாக்குதல் அனைத்துப் நாடுகளுக்கும் எதிரானதாகக் கருதப்படும். எனவே, போலந்தின் வான்வெளியில் டிரோன்கள் கண்டறியப்பட்ட சம்பவம், ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் போலந்து இரு நாடுகளும், நேட்டோ தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதைக் கண்டறிந்த போலந்து ராணுவம் அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்தியது. ரஷ்யாவுக்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நாடாக போலந்து திகழ்கிறது. மேலும், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளது.
நேட்டோ கூட்டமைப்பின் விதிப்படி, ஒரு உறுப்பினருக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் நடவடிக்கை, ஒட்டுமொத்த கூட்டமைப்பிற்கே எதிரான செயல் என்று கருதப்படும். அந்த நாடுக்கு ஆதரவாக அனைத்து உறுப்பினர்களும் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உண்டு.
இதனால், போலந்து எல்லைக்குள் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவிய சம்பவம், ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் போலந்து வலியுறுத்தி வருகின்றன.
உலகளாவிய அரசியல் சூழலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ள இந்த சம்பவம், உக்ரைன் போரின் திசை மாற்றத்தில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.