செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய் ப்ரணீத் பதவியேற்பு
செங்கல்பட்டு: நவம்பர் 29, 2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.
இவருக்கு பின் சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங், பிரதீப் ஆகியோர் எஸ்பியாக பணியாற்றினர். இதற்கிடையே கள்ளச்சாராயம் விவகாரத்தில் பிரதீப்பை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேறு மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக தமிழக அரசு நியமித்தது.
இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சாய் பிரணீத் காவலர்கள் முன்னிலையில் பதிவு ஏற்ற கொண்டார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக பூங்கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது.