சென்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்….
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் சூர்யா (40). மாற்றுத்திறனாளியான இவர் நந்தனத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மற்ற நாட்களில் வீட்டிலும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டும்.
வழக்கமாக ஆட்டோவில் வேலைக்கு செல்வார். இவர் சென்னை தேனாம்பேட்டை வி.என்.சாலையில் ஆட்டோவில் வேலை முடிந்து திரும்பியபோது, சாலையோரம் நின்றிருந்த மரம் ஆட்டோ மீது விழுந்தது. ஆட்டோவின் பின் இருக்கையில் இருந்த சூர்யா, நசுங்கி உயிரிழந்தார்.
டிரைவர் சேகருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மரம் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மரத்தின் பாகங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் விபத்தில் பலியான சூர்யாவின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.