May 2, 2024

கர்நாடகா தேசிய பூங்காவில் 5வது குட்டியை ஈன்ற வேதா யானை

கர்நாடகா: பன்னெர்கட்டா தேசிய பூங்காவில் 130 கிலோ எடையில் 5-வது குட்டியை வேதா யானை ஈன்றுள்ளது. தாயுடன் குட்டி கொஞ்சுவதை பார்ப்பவர்கள் உள்ளம் மகிழ்கிறது.

கர்நாடக மாநிலம் பன்னெர்கட்டா தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வேதா என்ற யானை, ஐந்தாவதாக ஆண் குட்டியை ஈன்றுள்ளது.

130 கிலோ எடை கொண்ட அந்தக் குட்டி ஆரோக்கியமாக உள்ளதாக அதைக் கண்காணித்து வரும் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். தாய் யானைக்கு பச்சைப் பயறு, தேங்காய், உளுந்து, அவல், கடலைப் பருப்பு கலந்த சத்துணவு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!