இந்தியாவின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சீனா கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளது. பெய்ஜிங்கில் சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ், இந்தியாவுக்குப் போகும் பிரம்மபுத்திரா நதியின் நீரையும் சீனா நிறுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் மீது மேற்கொண்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக சந்தேகம் கிளம்பியிருந்தது. இதற்குப் பதிலாக இந்தியா “ஆபரேஷன் சிந்து”யை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குப் போகும் சிந்து நதி நீரின் போக்கை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையைக் கடுமையாக விமர்சித்த சீன அதிகாரி, இந்தியா இந்த நடவடிக்கையைத் தொடருமானால், சீனாவும் அதேபோல் இந்தியாவுக்குப் போகும் நீரைத் தடுக்கும் என்று எச்சரித்தார். குறிப்பாக, பிரம்மபுத்திரா நதி சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பாய்கிறது என்பதால், சீனாவிடம் கட்டுப்பாடு அதிகம் என அவர் கூறினார். பாகிஸ்தான் மீது நடப்பது போலவே சீனாவும் எதிராக செயல்பட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் கடந்த போர் சூழ்நிலைகளிலும் சிந்து நீர் ஒப்பந்தம் தொடரப்பட்டதைக் கருத்தில் கொண்டால், முடிவுக்கு பஹல்காமில் நடந்த பயங்கரவாதம் தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சீனாவின் இந்த அரசியல் வகை எச்சரிக்கையை, பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது, நீர் சமதுலையாக பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தங்களை அரசியலாக்கும் ஒரு ஆபத்தான முயற்சி எனவே பார்க்கப்படுகிறது.