வாடிகன் நகரம்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 அன்று தனது 88 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், புதிய போப்பின் தேர்தலைக் குறிக்கும் வகையில் நேற்று வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன. கார்டினல்கள் தங்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த 267-வது போப்பைத் தேர்ந்தெடுத்தனர். முதல் முறையாக, அமெரிக்க கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இனிமேல் அவர் 14 லியோ என்று அழைக்கப்படுவார்.