அலாஸ்கா: அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபரி புதிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் அமெரிக்காவின் மத்திய மாகாணமான அலாஸ்காவில் இருநாட்டு தலைவர்களும், பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஷிய அதிபர் புதின், “இந்த பேச்சுவார்த்தை முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும் இது சரியான நேரம். அப்போது ஜோபைடன் இடத்தில் டிரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் போர் ஏற்பட்டு இருக்காது. இப்போது ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவு எட்டவேண்டுமானால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நான் பேச வேண்டும். அவர் உடன்பாட்டுக்கு ஒத்துக்கொண்டால் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக உலக தலைவர்கள் கருதுகிறார்கள்.