கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டு தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது வீசியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
முக்கிய ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய உயர் இராணுவத் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒரு அறிக்கையில், ஈரான் இராணுவம், “ஈரானின் பாதுகாப்புப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிராந்தியங்களில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சிகளால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வலுவான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று கூறியது.

மறுபுறம், ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் கேட்டன, மேலும் இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை முன்னதாக, ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், தெஹ்ரானில் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரானின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதிப்படுத்தியது. நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.