வாஷிங்டனில் இருந்து விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலின்படி, இன்று பூமிக்கு மிக நெருக்கமாக ஒரு பெரிய விண்கல் கடந்து செல்ல இருக்கிறது. இந்த விண்கலின் பெயர் ‘2008 DG5’ ஆகும். இதன் அளவு சுமார் 1,400 அடி (426.72 மீட்டர்) ஆகும். இது அமெரிக்க கால்பந்து மைதானத்தை விட மூன்று மடங்கு நீளமுடையதும், எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட உயரமுடையதுமானதாக உள்ளது. இது பூமிக்கு சுமார் 35 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு நெருக்கமாக வந்தால், பூமியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு அதன் பாதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறிய மாறுதலால் கூட இவை பூமியில் மோதும் அபாயத்தை ஏற்படுத்தலாம். 1908ம் ஆண்டு இதேபோன்று ஒரு விண்கல் சைபீரியாவில் மோதியபோது சுமார் 8 கோடி மரங்கள் அழிந்தன. அது 130 மீட்டர் அளவிலேயே இருந்தது. இப்போது வரும் 2008 DG5 அதன் மூன்று மடங்குக்கும் மேலானது என்பதால், அதன் தாக்கம் மிக பேரழிவாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த விண்கல் பூமியில் மோதினால், சுமார் 130 கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்தும் அழிந்து விடும். சென்னையில் விழுந்தால் வேலூர், திருப்பதி, விழுப்புரம் வரை தாக்கம் ஏற்படும். நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. எரிமலைகள் வெடிக்கத் தொடங்கி, உலகம் முழுவதும் கரும்புகை பரவி, சூரிய ஒளியை தடுக்கலாம். இதனால் பூமி பனிக்கால நிலைக்கு மாறி, உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போகும் அபாயமும் இருக்கிறது.
ஆயினும், தற்போது இந்த விண்கல் பூமியில் மோதும் சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதால் பயப்பட தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது. இது போன்ற தகவல்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி பார்க்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இவை விண்கற்கள் பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கும் வழிவகுக்கின்றன.