புது டெல்லி: சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் X தளம் இந்தியாவில் முடக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேண்டுகோளின்படி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் X பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் X கணக்கைத் தடுக்க மத்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் போது, ராய்ட்டர்ஸ் உட்பட சில செய்தி நிறுவனங்களின் X கணக்கைத் தடுக்க மத்திய அரசு X நிறுவனத்தை வலியுறுத்தியது.

ஆனால் அது கட்டாயப்படுத்தப்படவில்லை. அந்த நேரத்தில் பல செய்தி நிறுவனங்களின் X கணக்குகள் தடுக்கப்பட்டிருந்தாலும், ராய்ட்டர்ஸின் X கணக்கு தடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில், எலான் மஸ்க் தலைமையிலான X நிறுவனம் முன்பு விடுத்த கோரிக்கையை இப்போது செயல்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க X நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.