திருச்சி: ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை( ஜூலை 10) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை( ஜூலை 10) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரை வீதி, அடைய வளைஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல், சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர்.
பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம் பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர், இயக்கலும் , காத்தலும் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.