ஜம்மு: அமர்நாத் யாத்திரையின் போது இதுவரை 1.65 லட்சம் பக்தர்கள் பாணி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் இரு வழித்தடங்களிலும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடையும். 11-வது குழு நேற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து புறப்பட்டது.

பஹல்காம் வழியாக அமர்நாத் யாத்திரைக்கு 4302 பேரும், பால்டால் வழியாக 2337 பேரும் புறப்பட்டனர். அவர்கள் பலத்த பாதுகாப்பின் கீழ் சுமார் 159 வாகனங்களில் தனித்தனி குழுக்களாகச் சென்றனர்.
இதில் 1462 பெண்கள், 41 குழந்தைகள் மற்றும் 181 யாத்ரீகர்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரை 1.65 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.