டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடன் தள்ளுபடிகள் குறித்து கூறுகையில், “2015-16 முதல் 2024-25 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், பொதுத்துறை வங்கிகள் ரூ.5.82 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.1.14 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. எஸ்பிஐக்குப் பிறகு, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.85,540 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,1243 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதேபோல், கனரா வங்கி ரூ.56,491 கோடி மதிப்புள்ள கடன்களையும், பாங்க் ஆஃப் பரோடா ரூ.70,061 கோடி மதிப்புள்ள கடன்களையும் கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்துள்ளன.
மேலும், பொதுத்துறை வங்கிகள் 1,600-க்கும் மேற்பட்ட பெருநிறுவனக் கடன் வாங்குபவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்தது. “அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களாக வகைப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட ரூ.1.63 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளனர்.” இவ்வாறு கூறியுள்ளார்.