புது டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின்னர் பேசிய கார்கே, “பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் வெளிப்படையாக நீக்கப்படுகின்றன.
உயிருடன் இருப்பவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல.

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் ஒரு போராட்டம். இப்போது ஆட்சியில் நீடிக்க ஆளும் கட்சி எந்த ஒழுக்கக்கேடான செயலையும் செய்யத் தயாராக உள்ளது.
தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன” என்றார்.