மும்பை: இந்தியாவில் நாளிதழ்கள் மற்றும் இதழ்களின் வினியோகத்தை (Circulation) தணிக்கை செய்து சான்றளிக்கும் ஆடிட் பியூரோ ஆப் சர்குலேஷன் (ABC) அமைப்பின் 2025–26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.டி.சி., நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி துறையின் நிர்வாக துணைத் தலைவர் கருணேஷ் பஜாஜ், இவ்வாண்டுக்கான தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன், ‘பென்னட் கோல்மேன் அண்டு கோ லிமிடெட்’ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் மோஹித் ஜெயின், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமைப்பின் விளம்பரதாரர் பிரதிநிதிகளாக கருணேஷ் பஜாஜ் (ஐ.டி.சி.), அனிருதா ஹால்டர் (டிவிஎஸ் மோட்டார்), பார்த்தோ பானர்ஜி (மாருதி சுசூகி) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெளியீட்டாளர் பிரதிநிதிகளாக, மோஹித் ஜெயின் (பென்னட் கோல்மேன்), துருபா முகர்ஜி (ஏபிபி), ரியாத் மேத்யூ (மலையாள மனோரமா), கிரிஷ் அகர்வால் (டி.பி. கார்ப்பரேஷன்), ஷைலேஷ் குப்தா (ஜாக்ரன் பிரகாசன்), கரன் தர்தா (லோக்மத் மீடியா), பிரதாப் பவார் (சகல் பேப்பர்ஸ்), எல். ஆதிமூலம் (தினமலர்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விளம்பர முகமை பிரதிநிதிகளாக விக்ரம் சகுஜா (மேடிசன் கம்யூனிகேஷன்ஸ்), ஸ்ரீனிவாசன் கே. சுவாமி (ஆர்.கே. சுவாமி), பிரசாந்த் குமார் (குரூப் எம். மீடியா), வைஷாலி வர்மா (இனிஷியேட்டிவ் மீடியா), சேஜல் ஷா (பப்ளிசிஸ் மீடியா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ABC, இந்திய ஊடகத் துறையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறது. இம்முறை தேர்வான நிர்வாகிகள், அமைப்பின் பணிகளை மேலும் வலுப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.