குஜராத்: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 84 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநில போலீசார் ‘குழந்தைப் பருவ சுதந்திர நடவடிக்கை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.
குழந்தை தொழிலாளர் சட்டங்களை மீறி சிறுவர்களை பணியில் ஈடுபடுத்திய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சூரத்தில் உள்ள ஜெய் அம்பே டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதுடன், மிகக் குறைந்த சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
மாநிலம் முழுவதும் கடந்த 14 நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 84 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை பணியில் அமர்த்திய 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.