புது டெல்லி: பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்க்கும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்ய பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது:-
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்த பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும். விதிகள் மீறப்பட்டிருந்தால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ரத்து செய்யப்படும்.

இந்த விவகாரம் தொடர்பான வாதங்களை அடுத்த விசாரணையான அக்டோபர் 7-ம் தேதி தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு கடந்த 8-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.