சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். முதுமையால் அவதிப்பட்டு வந்த அம்சவேணி, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணியின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அவர்களைப் பெற்றெடுத்து, நேசித்து, வளர்த்த தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் அவர்களது அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.