பாப்பராசிகள் மூலம் விளம்பரம் தேவையில்லை சொல்கிறார் பிரியா மணி
சென்னை: பாப்பராசிகள் கலாச்சாரம் குறித்து தனக்கு தெரிந்த போது, அதிர்ந்து போனேன் என நடிகை பிரியா மணி தெரிவித்துள்ளார். மேலும், பாப்பராசிகள் மூலம் எனக்கு நானே விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பவில்லை. பிரபலங்கள் தாங்கள் பொது இடங்களில் இருக்கும் போது புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டு கவனம் ஈர்த்து கொள்வதற்காக புகைப்படக் கலைஞர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இதுவே எனக்குத் தெரியாது” என்றார்.