ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு: உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு, பிப்.27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆலையை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.