
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்து ஹரிவராசனம் பாடல் ஒலிக்கும் வரை முன் வரிசையில் நின்றார். திலீப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இந்த செயலுக்கு உயர்நீதிமன்ற தேவசம்போர்டு அமர்வு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளிகிருஷ்ணா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபரிமலையில் விஐபி தரிசனத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மீறி நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேவசம் போர்டு உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.