நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா என்று தெரிவிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் உள்ளார்.
மத்திய அரசு அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் கோரியது. அந்த நேரத்தில், தஹாவூர் ராணா சார்பாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அதன் பிறகு, தஹாவூர் ராணா அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், ஆனால் அந்த நீதிமன்றமும் அதை தள்ளுபடி செய்தது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா உத்தரவு பிறப்பித்தது. அந்த நேரத்தில், தஹாவூர் ராணா தனது நாடுகடத்தல் எதிர்ப்பு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதித்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. தஹாவூர் ராணா பாகிஸ்தானைச் சேர்ந்தவர், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.