சென்னை: தவெகவை குழந்தை பெற்றுக்கொள்ளும் கட்சி என்று பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திருவான்மியூரில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:- 2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, இந்தியாவில் மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.45 கோடியாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2024-ல் நம் நாட்டில் மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 7.90 கோடியாக இருக்கும்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியால் 4.45 கோடி பேர் புதிதாக வரி செலுத்துபவர்களாக மாறியுள்ளனர். பட்ஜெட்டை பார்த்த மத்திய அரசு வழக்கம் போல் தமிழக மக்களை வஞ்சித்து விட்டது என புதிய கட்சி தொடங்கி தலைவராக இருக்கும் ஒருவர் (தவெக தலைவர் விஜய்) கூறியுள்ளார். பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் அல்ல. நீங்களும் இரண்டு பேரை உட்கார வைத்து முறைப்படி விளக்கச் சொல்ல வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் வேறு, பட்ஜெட் வேறு, இவர்களெல்லாம் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். இதில் ‘சில்ட்ரன்ஸ் விங்‘ வேறு. குழந்தை பசங்க இருக்கக்கூடிய கட்சி, என விமர்சித்தார்.